‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ மற்றும் ‘கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கெசன்ட்ரா கதாநாயகியை மையப்படுத்திய கதை அமைப்புகொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் துவங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இதற்கு முன் கார்த்திக் ராஜு இயக்கிய ‘கண்ணாடி’ படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்த இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகி அங்கு நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக தமிழ் ‘கண்ணாடி’ இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் கார்த்திக் ராஜு தனது அடுத்த படமாக ரெஜினா நடிக்கும் படத்தின் வேலைகளை துவங்கி விட்டார். இந்த படத்தை ‘ஆப்பிள் ட்ரீ புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ராஜ்சேகர் வர்மா தாயாரிக்கிறார். மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ரெஜினாவுடன் அக்ஷரா கௌடாவும் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கேசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா, ஆகியோர் முக்கிய...
‘குற்றம்-23’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகனும், அருண் விஜயும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்...
‘குற்றம்-23’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகனும், அருண் விஜய்யும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில்...