இயக்குனர் அறிவழகனும், அருண் விஜய்யும் முதன் முதலாக இணைந்து உருவாக்கிய ‘குற்றம்-23’ வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மற்றுமொரு படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தை ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிரார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்த படத்தில் ரெஜினா கெசண்ட்ரா கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிற்து.
‘குற்றம்-23’ படத்தை ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்கிய அறிவழகன் இந்த படத்தை ‘ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்’ படமாக இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். ‘குற்றம்-23’ படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இப்படத்திலும் கலை இயக்குனராக பணிபுரிகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இப்படத்தை கோடை விடுமுறை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...