‘ஜாக்சன் துரை’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இயக்குனர் தரணீதரனும், சிபி ராஜும் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவலை கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். அதே நேரம் இப்படத்திற்கு ‘ஷிவா’ என்று டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலையும் பதிவு செய்திருந்தோம். ஆனால் இப்போது இந்த படத்திற்கு ‘ரேஞ்சர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று இயக்குனர் தரணீதரன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் இந்த படம் கடந்த ஆண்டு நடந்த சில நிஜ சம்பவங்கள் மற்றும் ‘அவனி’ என்ற புலியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார் தரணீதரன்.
‘MG AURAA CINEMAS’ என்ற நிறுவனம் சார்பில் காவ்யா மகேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் சிபி சத்யராஜ் காட்டு இலாகா அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். கல்யாண் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை T.N.கபிலன் கவனிக்கிறார். விமல் ராம்போ சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
#Sibiraj #Ranger #DirectorDharaniDharan #RemyaNambeesan #ArollCorelli #KalyanVenkataraman #Shivanandeeswaran #TNKabilan #VimalRambo #MGAuraaCinemas
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கி வரும்...
சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’ மற்றும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு படம் ஆகியவை ரிலீஸுக்கு...