மூன்று நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா படம் பற்றிய செய்தி ஒன்றை தொகுத்து வழங்கிய தனியார் சேனல் விஜேக்கள் இரண்டு பேர், படம் பற்றிய செய்தியை மட்டும் சொல்லாமல், நடிகர் சூர்யாவைப் பற்றிய தனிநபர் விமர்சனமாக முன்வைத்தனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் அந்த தனியார் சேனலுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதோடு, இன்று காலை அந்த தனியார் சேனல் அலுவலகம் முன்பு ‘மன்னிப்பு கேட்கக் கோரி’ போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்தில் அகில இந்திய சூர்யா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த தலைவர், செயலாளர், மாநில அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் உட்பட 2000த்திற்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அறிந்த நடிகர் சூர்யா அது குறித்து ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், ‘‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற!’’ என்று குறிபிட்டுள்ளார்.
கடைசியாக வந்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட தனியார் டிவி சேனல் இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கேட்பதாகக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
#Suriya #ThaanaSernthaKoottam #Singam3 #SuriyafansProtest #TSK
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...