சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி முதலானோர் நடித்துள்ள ‘கத்திசண்டை’ திரைப்படம் நாளை மறுநாள் (23-12-16) உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும்போது,
‘‘முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆட்டோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்ப்பார்கள்! அவர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் நண்பர்களிடமும், தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது, தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று சொல்வார்கள். அதை கேட்டு தியேட்டருக்கு மக்கள் கூட்டமும் வரும். படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது பெரும்பாலான தியேட்டர் வளாகத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை. இதனால் நிறைய பேர் முதல் காட்சியை பார்க்க வருதில்லை! ஆனால் இந்த ‘கத்திசண்டை’ படம் மூலம் அதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், இப்படத்தை வெளியிடும் ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ ஜெயகுமார், இயக்குனர் சுராஜ் ஆகியோர் இணைந்து திரையரங்க உரிமையாளர்களிடம் ‘கத்திசண்டை’ படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டருக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்றார்.
#KaththiSandai #Vishal #Vadivel #Tammanah #Soori #Suraj
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...