சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘கத்திசண்டை’ முதலில் இம்மாதம் ரிலீசாகவிருந்தது. ஆனால் சூர்யாவின் ‘சிங்கம்-3’, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள ‘போகன்’ உட்பட வேறு சில படங்களும் இம்மாத ரிலீஸ் ப்ளானில் இருந்து வந்ததால் ’கத்திசண்டை’யின் ரிலீஸை பொங்கலுக்கு தள்ளி வைத்தார்கள். ஆனால் இப்போது சூர்யாவின் ‘சிங்கம்-3’, ஜெயம் ரவி, அரவிந்த் சாமியின் ‘போகன்’ ஆகிய இரண்டு படங்களும் இம்மாத ரிலீஸ் ப்ளானிலிருந்து பின் வாங்கியிருப்பதால் ‘கத்திசண்டை’யை இம்மாதமே ரிலீஸ் செய்து விட முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘கத்திசண்டை’யை 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸை முன்னிட்டு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. இதனால் விஷால் மற்றும் சசிகுமார் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...