‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டனை’ ‘றெக்க’ என வரிசையாக வெற்றிப் படங்களை தந்த விஜய்சேதுபதி அடுத்து ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் ஒரு சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்படத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லையாம். மாறாக சிம்புவின் ’அச்சம் என்பது மடமையடா’ பட நாயகியான மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில மஞ்சிமா மோகன் தற்போது விக்ரம் பிரபுவுடன் ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#VijaySethupathi #ManjimaMohan #Rekka #Dharmadurai #AandavanKattalai #Renigunta #PanneerSelvam
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...