நடிகர் ர்சூர்யாவும், இயக்குனர் ஹரியும் ஐந்தாவது முறையாக இணைந்துள்ள ’சிங்கம்-3’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனுஷ்கா ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க பொருத்தமான ஒரு நடிகரை தேடி வந்தார்கள்! ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் பல நடிகர்களை பரிசீலனை செய்த படக்குழுவினர் கடைசியாக மும்பையை சேர்ந்த கட்டு மஸ்தான உடல் அமைப்பை கொண்ட தாக்கூர் அனூப் சிங் என்பவரை ‘சிங்கம்-3’யில் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். சூர்யாவுடன் தாக்கூர் அனூப் சிங் மோதும் படு பயங்கர சண்டை காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் விரைவில் படமாகவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ப்ரியன் கவனிக்க, இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்’ பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...