‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ முதலான படங்களை இயக்கிய கண்ணன் அடுத்து கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். ‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவம சார்பாக ஆஷாஸ்ரீ தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் வி.என்.மோகன். இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஆவார். சண்டை பயிற்சிக்கு சில்வா, படத்தொகுப்புக்கு ஆர்.கே.செல்வா என கூட்டணி அமைத்துள்ள கண்ணன் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (19-8-16) துவங்கி, தொடர்ந்து 45 நாட்கள் நடெபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.
‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. இந்த படத்தில் அதர்வா, மேகா...
கௌதம் கார்த்திக்கின் கேரியரில் வெற்றிப்படமாக அமைந்த படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்...
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு...