‘வெள்ளக்கார துரை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் எழில். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் கதாநாயகிகளாக ரெஜினா காசன்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். எழில் இயக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சூரி இப்படத்திலும் முக்கியமான வேடம் ஏற்று நடிக்க இருக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் டி.இமான் இணையும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ‘மனிதன்’ பட வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இப்படம் எழிலின் பாணியில் நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகவிருக்கிறதாம்.
இ.வி.கணேஷ் பாபு இயக்கி வரும் படம் ‘கட்டில்’. மேப்பில் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த...
‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ மற்றும் ‘கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில்...
அறிமுகம் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் 'கட்டில்'. இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே...