‘காக்கா முட்டை’ மூலம் தனது திரையுலக அறிமுகத்தை அழுத்தமாக பதிவு செய்தவர் இயக்குனர் மணிகண்டன். இப்படம் தேசிய விருதை வென்றதோடு, லாபகரமான படமாகவும் அமைந்தது கூடுதல் சிறப்பு. இப்போது அவரின் அடுத்த படமான ‘குற்றமே தண்டனை’ படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படமும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதோடு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படமும் முந்தைய படங்களைப்போலவே விருது மற்றும் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்படுகிறதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதனை மறுத்துள்ளார் மணிகண்டன். போலி பாஸ்போர்ட் கதைக்களத்தை பின்னணியாகக் கொண்ட ‘ஆண்டவன் கட்டளை’ ஒரு வித்தியாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் கதை,...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும், ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்...