‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 9-ஆம் தேதி திண்டுக்கல்லில் துவங்கியது. கடந்த 16 நாட்களாக அங்கு நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது! சிம்பு உட்பட அனைத்து படக்குழுவினரும் தந்த பெரும் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருப்பதை தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். சிம்பு மாறுபட்ட கெட்-அப்களில் நடிக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, வி.டி.வி.கணேஷ், மஹத் ஆகியோரும் நடிக்கிறார்கள். திண்டுக்கல் படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கான இரண்டு பாடல்களின் பதிவு ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...