ரஜினி நடிப்பில் ‘கபாலி’ திரைப்படத்தை தயாரித்துள்ள ‘கலைப்புலி’ எஸ்.தாணு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘கபாலி’ திரைப்படத்தை சட்டத்தை மீறி இணையதளங்களில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அந்த இணைய தளங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார். ‘கலைப்புலி’ எஸ்.தாணு அளித்த இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒரு அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது! அதில், ‘கபாலி’ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிடும் இணையதளங்களை உடனே முடக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு ‘கபாலி’ பட குழுவினரை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது!
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...