‘ஸ்ரீசாய் ஃபிலிம் சர்க்யூட்’ என்ற பட நிறுவனம் சார்பில் டி.மனோஹரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. இப்படத்தில் தமிழ், பிரசாத், நரேஷ் ஆகிய புதுமுகங்கள் கதாநாயகர்களாக நடிக்க, புதுமுகம் தீப்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ்குமார் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ‘தலைவாசல்’ விஜய், மலேசிய நடிகர் ஜோ, கே.ஆர்.விமல், ராஜசேகரன், சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் மணி ஷர்மாவின் அண்ணன் மகன் ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து இயக்குனர் மனோஹரன் நம்மிடம் கூறும்போது,
‘‘மலேசிய நாட்டில் வேலை செய்யும் மூன்று பசங்க, ஒரு பொண்ணு வெவ்வேறு சூழ்நிலையில் சந்தித்து நண்பர்கள் ஆகின்றனர்! அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்சனையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் அந்த ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் ‘கில்லி பம்பரம் கோலி’. இப்படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லை! தூய நட்பை மையமாக வைத்து மலேசியாவில் எடுக்கப்பட்ட யதாரத்தமான படம் இது’’ என்றார்.
இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார். நாக கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை பழனிவேல் கவனித்துள்ளார். படத்தொகுப்பை பி.சாய்சுரேஷ் கவனித்துள்ளார் ‘கில்லி பம்பரம் கோலி’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி...
உலகம் முழுக்க வெளியாகி பெரும் வசூல் குவித்த ’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்டில் பாங்காங்கில்...