‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிகொம்பு எனும் ஊரில் உள்ள சௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஸ்ரேயா, அக்கோயில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கு ஏற்கெனவே இரண்டு பாடல்கள் ரெடியாகி விட்டதாம்! குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...