‘தூங்காவனம்’ படத்தில் இணைந்த் கமல்ஹாசனும், இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவலை நமது இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறதாம். கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்சில் நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை கமல்ஹாசனே இயக்கி வருகிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிந்து விடும் என்றும், அதனை தொடர்ந்து ராஜேஷும், கமல்ஹாசனும் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது கமல் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் எக்ஸிக்யூட்டீவ் புரொட்யூஸராக இருக்கிறார் ராஜேஷ் எம்.செல்வா என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...