விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வெளிவந்த ‘24’ திரைப்படம் வெளியாகி தற்போது 50 நாட்களை எட்டியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஹரியின் இயக்கத்தில் சிங்கம் படத்தின் 3ஆம் பாகமான ‘எஸ் 3’ல் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் ஒன்றில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம். அதோடு, ‘கபாலி’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது அறிவித்திருக்கிறார். நேற்று நடந்த ‘கபாலி’ தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...