ஏற்கெனவே பல படங்களில் நடித்திருக்கும் நெப்போலியன் அரசியலில் நுழைந்த பிறகு திரைப் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்போது நெப்பொலியன் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கு வல்லவன்’, சசிக்குமார் தயாரித்து நடிக்கும் ‘கிடாரி’, குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய்பிரகாஷ் தயாரிக்க, ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படம், இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ‘சரபா’ என்ற தெலுங்கு படம் என பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார் நெப்போலியன்! புது பொலிவுடனும், கம்பீரத்துடனும் மீண்டும் நடிக்க வந்துள்ள நெப்பொலியனுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்.
மாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்!...
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...
கிரிஸ்டல் கிரீக் மீடியா மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில்,...