அதர்வா தயாரிப்பாளராக களமிறங்கி தயாரித்து, நடித்து வரும் படம் ‘செம போத ஆகாத’. அதர்வாவை வைத்து ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
‘பூமராங்' படத்தில் இணைந்த இயக்குனர் கண்ணனும் அதர்வாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும்...
‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...
‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...