தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் முக்கிய நிறுவனங்களில் பிவிபி சினிமா நிறுவனமும் ஒன்று. தமிழில் நான் ஈ, விஸ்வரூபம், பெங்களூர் நாட்கள், தோழா உட்பட பல படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் குறித்த வதந்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பிவிபி நிறுவனம். அந்த அறிக்கை இங்கே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது...
"வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது. தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும். ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமா தான். அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் . அதுமட்டுமின்றி, PVP சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது " என்று சொல்கிறது PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு.
கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 17-வது...
சென்ற வாரம் ‘ராட்சசி’, ‘களவாணி-2’, ‘காதல் முன்னேற்ற கழகம்’, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ ஆகிய 4...
'காலா பிலிம்ஸ்' சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக...