‘ஆறாது சினம்’ படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்திற்கான ஒரு முக்கிய காட்சியை சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஒரு குப்பை கிடங்கில் காலை 6 மணிக்கு துவங்கி தொடர்ந்து 36 மணி நேரம் படமாக்கப்பட்டு வருகிறது. இது அதிரடி ஆக்ஷன் காட்சியாம்! இதனை படமாக்க 5 அதிநவீன கேமாராக்கள் பயன்படுத்தி வருவதோடு, குப்பை கிடங்கு என்பதால் அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்து படம் பிடித்து வருகிறார்கள். அருண் விஜய் தனது Ice-In Cinemas Entertainment நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அருண் விஜய் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள ‘வா டீல்’ விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...