அருண் சிதம்பரம் இயக்கியுள்ள ‘கனவு வாரியம்’ என்ற தமிழ் படத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘ரெமி’ விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நட்கரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் 49ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல் பெர்க், ரிட்லி ஸ்காட், ஆங்லீ உட்பட பல பிரபலங்கள் இந்த திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். நாற்பத்தி மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரெமி விருதுக்காக திரையிடப்பட்டுள்ளது. அப்படி திரையிடப்பட்ட படங்களிலிருந்து ‘கனவு வாரியம்’ திரைப்படம் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அருண் சிதம்பரத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதும் அருண் சிதம்பரமே!
அருண் சிதம்பரம் என்ற இளைஞர் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் ‘கனவு வாரியம்’. இந்த படம் வெளியாவதற்கு...
அருண் சிதம்பரம் என்ற இளைஞர் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் ‘கனவு வாரியம்’. இந்த படம் வெளியாவதற்கு...
ஆஸ்கர் விருது பெற்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடித்தவர் ஷ்ராவந்தி சாய்நாத். இவர் சென்னையை சேர்ந்த...