‘‘சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும், இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது! அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற ‘விசாரணை’. நான் ‘விசாரணை’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திர கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘விசாரணை’க்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும்! மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதை போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும், மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி’’ என்று ‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது சம்பந்தமாக தனுஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
ரெக்லஸ் ரோசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரம்’ கடந்த...