பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினியின் ‘காபாலி’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரனி’ன் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இப்போது ‘2.0’வின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த செட்டில் 500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் கலந்துகொள்ள, சில காமெடி காட்சிகளை படமாக்கி வரும் ஷங்கர், அடுத்து ரஜினி, அக்ஷய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்க உள்ளார். இதற்காக நேற்று முன் தினம் சென்னைக்கு வந்துள்ளார் அக்ஷய் குமார். ‘கபாலி’யின் முழு படப்பிடிப்பும் முந்துவிட்டு ரஜினி இப்படத்தில் தொடர்ந்து நடிக்க துவங்கியிருப்பதால் சூடு பிடித்துள்ளது ‘2.0’வின் படப்பிடிப்பு!
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...