‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. சந்தானம் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிபு நேற்று சென்னையில் தவங்கியது. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கும் இப்படத்தில் 1964-ல் வெளிவந்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்த மறைந்த நாகேஷின் மூத்த பேரன் பிஜேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் காட்சியில் சர்வர் சுந்தரமாக நடிக்கும் சந்தானம் பால் காய்ச்சுவது மாதிரி நேற்று படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ‘சர்வர் சுந்தர’த்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, பிரமோத் கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...