‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படம் மூலம் ‘யூத்’களின் பல்ஸை பலமாக பிடித்துக்கொண்டார். ‘ஏ’டாகூடமான அப்படத்திற்குப் பிறகு, சிம்புவை நாயகனாக வைத்து புதிய படமொன்றை ஆதிக் இயக்குகிறார் என செய்திகள் வெளிவந்தன. பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவது சிம்பு இல்லை, மீண்டும் ஜீ.வி.யே நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் மூன்று பேருமே இணைந்துதான் படம் செய்யவிருக்கிறார்களாம்.
ஆம்... ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறாராம். இப்படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிந்திரன் இயக்கத்தில் 3வதாக உருவாகவிருக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு செய்திகளுமே, மீடியாக்களில் வேறு வேறு வடிவில் வெளிவந்ததால்தான் இந்த குழப்பமாம்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...