தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படமான ‘மிருதனு’க்கு சென்சாரில் எந்தக் கட்டும் இல்லாமல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகப்படியான கோரக் காட்சிகளால் இந்த ரிசல்ட் கிடைத்ததாகக் கூறப்பட்டது. இருந்தபோதிலும், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப தயாரிப்பாளரும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் முடிவு செய்திருந்தார்கள். திட்டமிட்டபடி, ரிவைசிங் கமிட்டிலும் ‘மிருதன்’ படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி அதிகாரிகள் சிற்சில மாறுதல்களை மட்டும் கூறிவிட்டு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாம். இதனால் இப்படத்தை பெற்றோருடன் அமர்ந்து குழந்தைகளும் பார்க்கலாம்.
ஜெயம் ரவி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருக்கிறார். இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘மிருதன்’ வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...