‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இருமுகன்’. மலேசியாவில் நடந்து வந்த இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர் ‘இருமுகனி’ன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். நாளை (12-2-16) அல்லது நாளை மறுநாள் ‘இரு முகனி’ன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்த ஷெட்யூல் படப்பிடிபு தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெறுமாம். இப்படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, இன்னொரு நாயகியாக நித்யா மேனனும் நடிக்கிறார். விஜய் நடித்த ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இருமுகனை ‘அரிமா நம்பி’ படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
விக்ரம் நடிப்பில் வெளியான ‘டேவிட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படமான ‘சோலோ’ மற்றும் சில...
ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம்...