‘நாடோடிகள்’ படத்திற்குப் பிறகு சின்னச் சின்ன வேடங்களில் மட்டும் நடித்து வந்த அபிநயா, கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்’. டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. படத்தின் கதையைத் கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடா மேளம்’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று கூற, இப்போது அதையே தலைப்பாக்கிவிட்டார்கள். இப்படத்தில் ‘நாடோடிகள்’ அபிநயா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி, மிப்பு, ‘அவன் இவன்’ ராமராஜன், கானா பாலா உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் அன்பு.
இப்படம் பற்றி அபய் கிருஷ்ணா கூறியதாவது... ‘‘திருமண தரகராக வரும் கதாநாயகனிடம் நாயகி அபிநயா தனக்கு நடக்கவுள்ள திருமணத்தை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்திவிடுமாறு சொல்லி அதற்கு பணமும் கொடுக்கிறார். அபிநயாவை மணக்கத்துடிக்கும் மாப்பிள்ளை மிப்புவோ, திருமணத்தரகர் அபய் கிருஷ்ணாவிடம் எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடிக்குமாறு அபிநயா கொடுத்த தொகையை விட அதிகமாக கொடுக்கிறார். அவர்கள் இருவருக்குமான ஜாதகப்பொருத்தம் சூப்பர் என்று சொல்லி திருமணத்தை நடத்த சொல்கிறார் அபய் கிருஷ்ணா. அதன் பிறகு ஒரு உண்மை தெரிய வர அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த என்னென்ன முயற்சிகள் செய்கிறார் ஹீரோ, கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்’’ என்றார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.
‘நான் ஈ’ படப்புகழ் கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து...
‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீராகதிரவன் இயக்கி, தயாரித்துள்ள படம் ’விழித்திரு’. இரண்டு...
அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், மகிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள படம் ‘குற்றம்-23’. ராஜேஷ் குமார்...