சமீபத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் சிம்பு, அனிருத் சம்பந்தப்பட்ட பீப் சாங் குறித்து கவிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
‘‘தமிழ் திரைப்படத்துறை என்ற மிகப் பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர்! வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் ஒரு சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வெண்டும்.
அந்த எல்லை மீறப்படும்போது அது பலர் மனதை புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக இந்த சர்ச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கிலும், ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது. மக்கள் இன்னும் மழை பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில்அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த ஒரு தொற்றுநோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும். குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மன அசுத்தம் அடைவார்கள்.
இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த கூட்டறிக்கையில் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, சிநேகன், பா.விஜய், சொற்கோ, விஜய் சங்கர் உட்பட பல கவிஞ்ரகள் கையைழுத்து போட்டுள்ளார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...