கடந்த சில நாட்களாக தமிழகத்தை புரட்டிப்போட்ட மழையால் மாநிலத்தின் பல பகுதிகள் பெரிய சேதமடைந்திருக்கின்றன. இந்த பெருத்த சேதத்திலிருந்து மீண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் சில நூறு கோடிகளை நிவாரண நிதியாக அறிவித்திருக்கின்றன. இன்னொருபுறம் சமுதாயத்தின் பல மட்டங்களிலிருந்தும் உதவிக்கரங்களும் நீண்டு கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தமிழக மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சிலரும் நிவாரணத்தொகைகளை அறிவித்திருக்கிறார்கள். கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களான நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்கம் மூலமாக முதல்வரின் மழை நிவாரண நிதிக்காக வழங்கியிருக்கிறார்கள். அதேபோல் நடிகரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷாலும் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருக்கிறாராம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...