100 கோடி வசூல் என்ற பிம்பத்தை ‘சிவாஜி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியதே ஷங்கர் - ரஜினி கூட்டணிதான். அதன்பிறகு ‘எந்திரன்’ மூலம் உலகளவில் 200 கோடியை வசூல் செய்து, இந்திய சினிமாவையே வாய்பிளக்க வைத்தார்கள். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருந்தவேளையில், ‘எந்திரன் 2’ படம் பற்றிய செய்திகள் ஒருசில மாதங்களாக சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கின்றன.
‘லிங்கா’விற்குப் பிறகு தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் முகாமிட்டிருக்கிறது ரஜினி அன்ட் கோ. அது ஒரு புறமிருக்க, தன் ‘எந்திரன் 2’ படத்திற்காக பிரத்யேக மேக்-அப் டெஸ்ட் ஒன்றை தனது உதவி இயக்குனர்களுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்-அப் மேன் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருக்கிறாராம். ரஜினியைப் போலவே தோற்றம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க நபர்களை தேடிப்பிடித்து மேக்-அப் டெஸ்ட் நடத்தி வருகிறார்களாம். இதில் தேர்வாகும் நபரை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்கு ‘டூப்’பாக பயன்படுத்துவதற்குதான் இந்த ஏற்பாடாம். ‘கபாலி’ முடிந்ததும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம் சூப்பர்ஸ்டார். இப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
‘மேயாத மான்’, ‘மான்ஸ்டர்’ படப் புகழ் நடிகையான பிரியா பவானி சங்கர் இப்போது மாஃபியா, பொம்மை,...